ஞாயிறு, 14 ஜூலை, 2013

MODI SLAPS CONGRESS ON COMMONWEALTH

காமன்வெல்த் விளையாட்டில் நடந்த ஊழல் மூலம் நம் நாட்டின் மானத்தையே ஏலத்துக்கு விட்டுவிட்டோம்; நரேந்திர மோடி



நம் நாடு நிராசையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்றபோதிலும் நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள ஃபெர்குஸன் கல்லூரியில் புதிய அரங்கை இன்று திறந்துவைத்து மாணவர்களிடையே அவர் பேசியதாவது:
இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் இளைஞர்கள். திறமையான ஒருவர் இருந்தால் நம் நாட்டு இளைஞர்களிடையே உள்ள திறனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.நம் இளைஞர்கள் நவீன் உடைகள் அணிவதில் மட்டும் ஆர்வம் காட்டுவதில்லை. பல இன்னல்களுக்கு இடையிலும் புதுமையாக, ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்கள். இதுபோன்ற ஆர்வமிக்க இளைஞர்கள் உள்ள தேசத்தின் எதிர்காலம் இருண்டதாக இருக்கவே முடியாது.பண்டைய காலத்தில் நம் நாட்டில் இருந்த குருகுல முறை சிறப்பாக இயங்கி வந்தது. புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க உலகத்தின் பல பகுதியிலிருந்தும் வந்துள்ளனர். நமது பாரம்பரியம் எங்கே போய்விட்டது?அமெரிக்க கல்வி முறையில் தனி மனிதரின் படைப்பாற்றலை பண்படுத்தி பயனுள்ளதாக்கும் கல்வி முறை உள்ளது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அதே காலகட்டத்தில்தான் கொரியாவுக்கும் சுதந்திரம் கிடைத்தது. குஜராத் பரப்பளவுள்ள அந்த நாடு மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த சிறிய நாடு ஒலிம்பிக் விளையாட்டை நடத்துகிறது. விளையாட்டின் மூலம் உலகத்தில் ஒரு முக்கிய இடத்தை அந்த நாடு பிடித்துவிட்டது.நாமும் காமன்வெல்த் விளையாட்டை நடத்தினோம். ஆனால், காமன்வெல்த் விளையாட்டில் நடந்த ஊழல் மூலம், 120 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டின் மானத்தையே ஏலத்துக்கு விட்டுவிட்டோம்.ஒரு நாடு விளையாட்டின் மூலம் உலக அரங்கில் கௌரவத்தை சம்பாதித்துக் கொள்கிறது. மற்றொரு நாடு அவமானத்தை சம்பாதிக்கிறது. ஒரு அரசே நாட்டின் கௌரவத்தை குறைக்கும் விதமாக நடந்துகொள்ளும்போது அது மிகவும் கவலை அளிக்கிறது.இவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் ஒலிம்பிக்கில் நமக்கு பதக்கங்கள் கிடைப்பதில்லை என்று எல்லாரும் குறை கூறுகிறார்கள். ஆனால் நமது கல்வி முறையில் விளையாட்டை சேர்த்திருக்கிறோமா?ராணுவத்தில் புதிதாக சேர்ந்துள்ள வீரர்களுக்கு முறையாகப் பயிற்சி கொடுத்தால் அவர்கள் 10 பதக்கங்களை வென்று வருவார்கள் என்பது நிச்சயம். என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக