ஞாயிறு, 21 ஜூலை, 2013

ஜாதி -மரணத்தில் முடிந்த சோகம்


   

தர்மபுரி  கலவரம் ஒரு காதலால் தொடங்கி ஒரு மரணத்தில் முற்று பெறுமா ?


ஜாதி கலவரம் தமிழகத்தில் இல்லை ,அப்படி இருந்தால் ,தென் தமிழகத்தில் தானே நடைபெறும் என்றால்,அவர்களுக்கு ஓங்கி உரைக்க சொல்லுங்கள்.தமிழகமே ஜாதி என்ற சதியால் தான் இயங்கிகொண்டு இருக்கிறது.நமது அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற,ஜாதி என்ற பெயரில் நடத்திய மோசடி வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஒரு மக்களை காப்பாற்ற தலைவன்,ஒரு சமுகத்தை,ஒரு நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்?   

காதல் கல்யாணத்தில் முடியும்,ஆனால் கலவரத்தில் முடிந்தது.   


வட மாவட்டத்தில் இன்றும் ஜாதி கலவரங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.திவ்யாவை குற்றம் சொல்லமுடியாது,அதே சமயம் இளவரசனையும் வஞ்சிக்க முடியாது.ஜாதி அடிப்படையிலான மக்களின் பார்வை மங்கவில்லை.தலித் வீட்டில் இந்த நாய் தான் வளர்க்கணும்,இந்த வகை வளர்க்க கூடாது போன்ற கட்டுப்பாடு இன்னும் கிராமங்களில் இருக்கின்றது.      

ஜூலை 4,2013:

                   இளவரசன் மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளம் அருகே சவமாக கண்டெடுக்கப்பட்டார்.இதற்க்கு முன்தினம் தான், திவ்யா "இளவரசனோடு  சேர்ந்து வாழபோவதில்லை"என்று மனமாற்றத்தோடு கூறினார் என்பது அவரது முகத்தில் தெளிவாக தெரிந்தது.  

திவ்யா -இளவரசன் பிரிந்து வந்த பாதை 

அக்டோபர் 14,2012:
             இருவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
நவம்பர் 7,2012:
              திவ்யாவின் தாய் தேன்மொழி புதுமண தம்பதிகளை சந்தித்து மகளை தம்முடன் வருமாறு கேட்டார்.அதற்க்கு திவ்யா மறுக்க,அவரின் தந்தை தற்கொலை செய்துகொண்டார் .மரக்கோணம் கலவரம் வெடித்தது.    

மரக்காணம் கலவரம் வன்னியர்களால் திட்டமிட்ட கலவரம்,மூன்று தலித் கிராமங்கள் எரித்து தங்கள் பலத்தை காட்டினர்.
  


நவம்பர் 24,2012

             "இளவரசனுடன் விரும்பியே வந்தேன்" நீதிமன்றத்தில் காதல்            வாக்குமூலம்.  

மார்ச் 19,2013

திவ்யாவின் தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

மார்ச் 27,2013

                  நீதிமன்றத்தில் திவ்யா "இளவரசனோடு வாழ விரும்புவதாக" கூறினார் 

ஜூன் 4,2013

               தாய்க்கு உடல் நலமில்லை என்று திவ்யாவை வரவழைகின்றனர்

ஜூன் 6, 2013  

               தாயுடன் தற்காலிகமாக வாழ போவதாக நீதிமன்றத்தில் திவ்யா கூறினார் 

ஜூலை 1,2013: காதல் கலப்பு திருமணம்,தாய் விருப்பத்தில் முடிந்தது  

  • "தாய் விரும்பினால்தான் இளவரசனோடு சேர்ந்து வாழ்வேன்" கோர்டில் திவ்யா பதில்.
  • ஒருவேளை திவ்யா தாயின் பாசத்திற்கு மயங்கி இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
  • இல்லையேல்,மூளை சலவையில் மனம் மாறி இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

திவ்யாவிக்கு வாதாடிய வக்கீல்கள்  பா.மா.க வை சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் இருக்கவேண்டிய  விஷயம்      

ஜூலை 3,2013

                                 இளவரசனோடு சேர்ந்து வளபோவதில்லை                                 
திவ்யாவின் முடிவு இளவரசனின் மரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

                            
                                                    கடைசி நிமிடங்கள் 
தற்கொலையா?கொலையா? 

ஆராய ஆயிரம் காரணங்கள் உள்ளது ,ஆனால் மரணம்.

 



               ilavarasan killed by politics-ndtv                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக